Skip to main content

நகராட்சி அலுவலகமா? பார்ட்டி கிளப்பா? - கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

opposition parties are commenting against  chairman celebrated his birthday  municipal office

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர்மன்ற தலைவராக இருப்பவர் சௌந்தர்ராஜன். குடியாத்தம் நகர திமுக செயலாளராகவும் உள்ளார். தனது 55வது பிறந்தநாளை பிப்ரவரி 5 ஆம் தேதி கொண்டாடினார். 

 

பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு வார விடுமுறை தினத்தன்று தனது வீட்டில் இருந்து காரில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார் சேர்மன் சௌந்தர்ராஜன். அங்கே கட்சியினர், சில கவுன்சிலர்கள் சாலை முழுவதும் குழுமியிருந்தனர். சேர்மனின் கார் வந்து நின்றதும் காரில் இருந்து இறங்கிய சேர்மன் நகராட்சி அலுவலகத்தை நோக்கி நடந்தார். சேர்மனின் ஆதரவு மகளிர் அணியினர் அவர் நடந்து வரும் பாதை முழுவதும் பூக்களைத் தூவியும், பட்டாசுகளை வெடித்தும் வரவேற்றனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் 3 அடி நீளத்துக்கு கருப்பு – சிவப்பு கலரில் செய்து வைக்கப்பட்டு இருந்த பிறந்தநாள் கேக்கை தனது மனைவி, பிள்ளைகள் கட்சியினரோடு சேர்ந்து வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். 

 

 opposition parties are commenting against chairman celebrated his birthday municipal office

 

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிகழ்வை இப்போது எதிர்க்கட்சியினர் சர்ச்சையாக்கி உள்ளனர். நகர்மன்ற தலைவர் என்பவர் நகராட்சியின் முதல் குடிமகன். மக்கள் பிரதிநிதியான அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்கு பதில் அவரே நகராட்சி அலுவலகத்தை பார்ட்டி ஹாலாக மாற்றி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இப்படி நகராட்சி அலுவலகத்தை நாசம் செய்வது சரியா? அவர் பிறந்தநாள் நிகழ்ச்சியை அவர் வீட்டிலோ அல்லது அவர்களது கட்சி அலுவலகத்தில் வைத்திருந்தால் இதனை நாங்கள் யாரும் கேள்வி எழுப்பப் போவதில்லை. அரசு அலுவலகத்தில்; அதுவும் விடுமுறை நாளில்; இரவில் அலுவலகத்தை திறக்க வைத்து இப்படி கொண்டாடியதால் தான் கேள்வி எழுப்புகிறோம்.

 

நாளை எங்கள் கவுன்சிலர் ஒருவர் தனது பிறந்தநாளை நகராட்சி அலுவலகத்தில் இப்படி கொண்டாடினால் சேர்மன், கமிஷனர் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? பொதுமக்கள் யாராவது வந்து பர்த்டே பார்ட்டி கொண்டாடிக்கொள்ள நகராட்சி அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளட்டுமா எனக் கேட்டால் சேர்மன் என்ன பதில் சொல்வார்? எனக் கேள்வி எழுப்புகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்