Published on 03/06/2019 | Edited on 03/06/2019
50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
![Opening of schools across Tamilnadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/_iaBun7XrKr8ch3qvYv9hezKFbgSoF4hMmAghQMosr8/1559533229/sites/default/files/inline-images/00000000001231.jpg)
நேற்றே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு தமிழக போக்குவரத்துறை மாணவ மாணவிகள் அரசு பேருந்தில் பயணிக்க பழைய பஸ் பாஸ் செல்லும் என அறிவித்திருந்தது. புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை பழைய அட்டையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீருடை அணிந்து பயணிக்கும் மாணவ மாணவிகள் டிக்கெட் எடுக்க அவசியமில்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இன்று பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.