Skip to main content

23 வருடமாக இழப்பீடு கிடைக்கல... வட்டாட்சியர் அலுவலகம், ரயில்நிலையத்தில் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

No compensation for 23 years... Court order to confiscate district office, railway station!

 

நாமக்கல் அருகே, ரயில்வே துறைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 23 ஆண்டாக இழப்பீடு வழங்காததால், ரயில்நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம், நெ.3 கொமாரபாளையம் பகுதியில் கடந்த 1999ம் ஆண்டு இருப்புப்பாதை அமைப்பதற்காக, ரயில்வே துறையும், மாநில வருவாய்த்துறையும் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

 

இந்த வழக்கை விசாரித்த ராசிபுரம் நீதிமன்றம், இழப்பீடு வழங்காமல் காலம் கடத்தி வந்ததால் ராசிபுரம் ரயில் நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற ஊழியர்களுடன் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஜூன் 16ம் தேதி வட்டாட்சியர் அலுவலகம், ராசிபுரம் ரயில் நிலையத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

 

வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்தவித பொருள்களும் இல்லாததால் ஜப்தி நடவடிக்கைக்கு வந்த நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் இழப்பீடு தொகை வழங்க மேலும் சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து நீதிமன்ற ஊழியர்கள், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

 

இதையடுத்து அவர்கள் ரயில்நிலையத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர். ரயில்வே ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

தொடர்ந்து மூன்று முறை நீதிமன்ற உத்தரவுடன் விவசாயிகள் ஜப்தி செய்ய சென்றபோதும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

 

''வழக்கு விசாரணைக்கு ரயில்வே அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக வருவதில்லை. ஜப்தி நடவடிக்கைக்கு வந்தாலும், ஒத்துழைப்பு தருவதில்லை. எனவே, முறையான பதில் தெரிவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம்,'' என விவசாயிகள் கூறினர். பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களால் வட்டாட்சியர் அலுவலகம், ரயில்நிலையம் பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.