Skip to main content

‘நினைவோ ஒரு பறவை’ நூல் வெளியீடு (படங்கள்)

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், ‘நினைவோ ஒரு பறவை’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (18.01.2023) நடைபெற்றது.

 

நக்கீரன் இதழில் திரைப்பட இயக்குநர் மனோபாலா எழுதி தொடராக வெளிவந்த ‘நினைவோ ஒரு பறவை’ என்ற தொடரின் நூல் வடிவை நக்கீரன் பதிப்பக அரங்கில் நக்கீரன் ஆசிரியர் வெளியிட்டார். இந்நிகழ்வில் நடிகர் ரவி மரியா, எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ நூல் வெளியீட்டு விழா (படங்கள்)

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (27-02-24) மாலை 3 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர் தலைமை தாங்கினார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி நூலினை வெளியிட்டு, திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

'புத்தகம் புது பூமி’ என்ற தலைப்பில் பேசிய திரைக் கலைஞர் ரோகிணி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024

 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டாவது நாளான நேற்று அரங்கத்தில் நடைபெற்ற 'புத்தகம் புது பூமி’ என்ற தலைப்பில் திரைக் கலைஞர் ரோகிணி பேசினார். மற்றும் ‘வாழ்தல் இனிது’ பற்றி ஈரோடு மகேஷ் பேசினார். இந்த நிகழ்வில் பபாசி துணைத் தலைவர் நக்கீரன் ஆசிரியர் வரவேற்புரை வழங்கினார். அதேபோல், பபாசி செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம் நன்றியுரை ஆற்றினார்.