சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், ‘நினைவோ ஒரு பறவை’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (18.01.2023) நடைபெற்றது.
நக்கீரன் இதழில் திரைப்பட இயக்குநர் மனோபாலா எழுதி தொடராக வெளிவந்த ‘நினைவோ ஒரு பறவை’ என்ற தொடரின் நூல் வடிவை நக்கீரன் பதிப்பக அரங்கில் நக்கீரன் ஆசிரியர் வெளியிட்டார். இந்நிகழ்வில் நடிகர் ரவி மரியா, எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.