Skip to main content

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்றால் 10,000 ஃபைன் ; பத்து மடங்கு எகிறிய அபராதங்கள்!

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

New Motor Vehicle Act

 

போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10  மடங்கு அபராதம் விதிக்கும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாகன விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் நடவடிக்கையாக இந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருந்த நிலையில், தமிழக அரசும் இது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. இனி புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அனைத்து வாகன விதிமீறல்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. விதிகளை மீறுவோருக்கான அபராத பட்டியலும் வெளியாகியுள்ளது.

 

அதன்படி தலைக்கவசம் அணியாவிட்டால் முன்பு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை பிடிபட்டால் 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் முன்பு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முதல் முறை பிடிபட்டால் 10,000 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 15 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

 

ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் முன்பு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை பிடிபட்டால் 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கினால் முன்பு 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

ஆபத்தான முறையில் பயணம் செய்தால் முன்பு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை சிக்கினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை சிக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

சாலை பந்தயத்தில் ஈடுபட்டால் முன்பு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை சிக்கினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை சிக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள், அவசர சேவை வாகனங்களுக்கு சாலையில் வழிவிடாமல் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.