Skip to main content

சட்டமன்றத்தில் நீட்... திமுகவின் கவன ஈர்ப்பும்... முதல்வரின் கேள்வியும்...

Published on 15/09/2020 | Edited on 15/09/2020
Neet in the assembly ... DMK's attention ... Chief's question

 

 

கரோனா தொற்று காரணமாக போதிய இடவசதிகள் இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டமன்ற கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு நேற்று  சட்டசபை கூடியது.

 

இன்று இரண்டாம் நாளாக சட்டசபை கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

 

இந்நிலையில் 2010-ல் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தபோது திமுக கூட்டணியில் இருந்ததா, இல்லையா? என ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

 

அதனையடுத்து நீட் தேர்வுக்கு ஆதரவான வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி ஆஜராகியதாக கூறிய அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேச்சை நீக்கக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால்  கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் சட்ட சபை உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்