Skip to main content

நாகூர் தர்கா அறங்காவலர்கள் இடையே சமரசம்!- சந்தனக் கூடு திருவிழாவை ஒற்றுமையுடன் நடத்த அறிவுறுத்தல்!

Published on 15/12/2019 | Edited on 15/12/2019

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் நாகூர் தர்கா அறங்காவலர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. இதற்குப் பாராட்டு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
 

நீதிபதிகள் சமரச குழு 'நாகை மாவட்ட நாகூர் தர்கா 180 ஆண்டுகள் பழமையானது. அனைத்து மதத்தினரும் இங்கு வந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர். இந்த தர்காவில் 8 பேர் அறங்காவலர்களாக இருந்து நிர்வகித்து வருகின்றனர். இவர்களது நியமனம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும். இந்த நிலையில் 8- வது அறங்காவலராக இருந்த வாஞ்சூர் பக்கிர் இறந்துவிட்ட காரணத்தினால், அவருக்குப் பதிலாக கமீல் சாஹிப் என்பவர், தன்னை அறங்காவலராக நியமிக்க உரிமை கோரினார்.

nagai district nagore dargah santhanakoodu festival


இந்தப் பிரச்சனை தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, அக்பர் அலி ஆகியோர் அடங்கிய சமரச குழுவை அமைத்து, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சமரசம் செய்ய உத்தரவிட்டார்.

 

இதையடுத்து இந்த நீதிபதிகள் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 8- வது அறங்காவலராக செய்யது கமீல் சாஹிப்பை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சமரச குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதரப்புகளுக்கு ஆஜரான வக்கீல்கள் காஜா மொய்தீன் ஹிஸ்தி, ஸ்ரீநாத், ஸ்ரீதேவன் ஆகியோர், தங்கள் கட்சிக்காரர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு விட்டதாகக் கூறினர். அதைத் தொடர்ந்து  நீதிபதி, சமரசம் செய்த நீதிபதிகள் குழுவுக்கும், இரு தரப்பு வக்கீல்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.


பின்னர்,‘நாகூர் தர்கா தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்ததால், அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்த நீதிபதி, தற்போது சமரசம் ஏற்பட்டு விட்டதால், இதுவரை தர்கா நிர்வாகப் பொறுப்பை கவனித்துவரும் குழு, அனைத்து பொறுப்புகளையும் இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 


மேலும்,‘சமசரம் செய்த 3 நீதிபதிகளின் அறிவுரைகளை, தர்கா அறங்காவலர்கள் அனைவரும் தீவிரமாகப் பின்பற்றி, இந்த பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற சந்தனக்கூடு திருவிழாவின் போது, போலீஸ் பாதுகாப்பு வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஏதாவது ஒரு காரணத்துக்காக உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர்கள் வழக்கு தொடர்வார்கள். தற்போது அறங்காவலர்களுக்கு இடையே ஒற்றுமையும், சமரசமும் ஏற்பட்டு விட்டதால், வருகிற ஜனவரி மாதம் 26- ம் தேதி நடைபெற உள்ள ‘சந்தனக்கூடு’திருவிழாவை அனைவரும் ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன், அவரவர் பங்களிப்புடன் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’என்றும் நீதிபதி கூறியுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.