Skip to main content

சுடுகாட்டில் புதைத்த தாயின் உடல்... மகனின் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சி

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

Mother's body buried in crematorium ... Villagers shocked by son's action

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது பரவாய் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வேலு-மூக்காயி(70) தம்பதியினர். இவரது கணவர் வேலு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவர்களது மகன் பாலமுருகன் (38 வயது) மூக்காயி உடன் வசித்துவந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மூக்காயும் இறந்து போனார். உறவினர்கள் அவரது உடலை அந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் இறுதி சடங்குகள் செய்து புதைத்துவிட்டனர். தாய் இறந்த வேதனை தாங்க முடியாமல் அவரது மகன் பாலமுருகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்போல தனக்குத் தானே பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

 

அதோடு தினமும் சுடுகாட்டிற்குச் சென்று தனது தாய் புதைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து அழுது புலம்பி கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சுடுகாட்டுக்குச் சென்ற பாலமுருகன் தனது தாய் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எலும்புக் கூடான அவரது தாயை குழியிலிருந்து வெளியே எடுத்துள்ளார். ஊராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டி அப்பகுதியில் நின்றிருந்தது அதில் அவரது தாயின் எலும்புக்கூட்டை அள்ளிப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்து அதைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். தினமும் பாலமுருகனுக்கு உணவு கொடுக்கச் செல்லும் அவரது உறவினர் சுமதி என்பவர் வழக்கம்போல் அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பாலமுருகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

 

அவர்கள் வீட்டுக்குச் சென்று தேடிப் பார்த்தபோது எலும்புக்கூடு மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்ததோடு வீட்டில் வைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு இறந்துபோன மூக்காயி உடையதுதானா என்பதை அறிவதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதை உறுதி செய்த பிறகு மீண்டும் அதே சுடுகாட்டில் மூக்காயி எலும்புக்கூட்டை கொண்டுவந்து புதைத்துள்ளனர். சுடுகாட்டில் புதைக்கப்பட்ட தனது தாயின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து வந்த மகனின் செயல் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.