Skip to main content

புதுச்சேரி திமுகவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published on 19/05/2018 | Edited on 19/05/2018
sss

 

புதுச்சேரி மாநில  தி.மு.க நிர்வாகிகள் கள ஆய்வு கூட்டம் புதுச்சேரியில் உள்ள ஒரு  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டார். 

இக்கூட்டத்தில்  புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட புதுச்சேரி வடக்கு , தெற்கு , காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்திற்கு பின் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,  ‘’உச்ச நீதிமன்றத்தின் மூலமாக அரசியல் மற்றும்  ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும்,  பெரும்பான்மை நிரூபிக்க முடியாத பட்சத்தில்  எடியூரப்பா ராஜீனாமா செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்  அவர் மதசார்ப்பற்ற அணியும்,  காங்கிரசும்  ஒருங்கினைந்தது வரவேற்கதக்கது என்றும்,  மதர் சார்பற்ற அணிகள் வரவேண்டியது என்பது எங்கள் விருப்பம் என்றும் கூறிய ஸ்டாலின்,   கர்நாடகவில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற அணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.
 

சார்ந்த செய்திகள்