Skip to main content

1200 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகளுக்கு உறுதியளித்த அமைச்சர்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

Minister Senji Masthan has said  action will be taken get farmers due compensation

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கெங்கவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சீரக சம்பா மற்றும் பொன்னி நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்நிலையில், அந்த நெற்பயிர்கள் அனைத்தும் கடும் பனிப்பொழிவு காரணமாக திடீரென பூச்சிகள் தாக்கி சேதம் அடைந்துள்ளன.

 

அதைத் தொடர்ந்து, கெங்கவரம் கிராமத்தில் சாகுபடிக்குத் தயாராக இருந்த 1200 ஏக்கர் நெற்பயிர்களில் பூச்சு தாக்கியது குறித்து இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

விவசாயிகளிடம் இதுகுறித்து விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “கெங்கவரம் கிராமத்தில் சுமார் 400 ஹெக்டர் அளவிற்கு சாகுபடிக்குத் தயாராக இருந்த பொன்னி மற்றும் சீரக சம்பா நெற்பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை நான் உட்பட மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தினோம். நெற்பயிர்கள் வீணாகிவிட்டது என வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆகையால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர தமிழக அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.