Skip to main content

உணவுத்துறை அமைச்சருக்கு கரோனா; தேங்காய் உடைத்து வழிபாடு செய்த அ.தி.மு.க.வினர்!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021


 

Minister kamaraj affected by corona

 

கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விரைவில் பூரண நலம்பெற வேண்டி மன்னார்குடியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

 

உணவுத்துறை  அமைச்சர்  காமராஜூக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவர் நலம்பெற வேண்டும் என அ.தி.மு.க.வினர் ஆனந்த வினாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து உள்ளிக்கோட்டையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள் ஆலயங்களில் பால், பன்னீர், மஞ்சள், தேன், சந்தனம் இவைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

 

இது குறித்து மன்னார்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறுகையில், “ஊரடங்கு கெடுபிடியாக இருந்த காலத்தில்கூட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தனது ஆதரவாளர்களோடு பல நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர் சந்திப்பு எனத் தன்னை பரபரப்பாகக் காட்டிக் கொண்டார். இதனால், அவரோடு பயணித்த அவரது ஆதரவாளர்களும்கூட  நோய்த் தொற்று வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் உறைந்திருந்தனர். (இதனை நக்கீரன் இணையத்தில் செய்தியாக்கியிருந்தோம்) இந்தச் சூழலில் தற்போது கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் இருக்கிறார் அமைச்சர் காமராஜ். ஆனால், சுய உதவிக்குழு பெண்களைச் சந்தித்தது, மாணவ, மாணவிகளைச் சந்தித்தது, விவசாயிகளைச் சந்தித்தது, இறுதியாக பொங்கல் பரிசுப் பொருளை ஊர் ஊராகச் சென்று துவக்கிவைத்தது என பல பணிகளில் இருந்தார். இந்நிலையில், அவரை சந்தித்த மக்களும் நிர்வாகிகளும் அச்சத்தில் உள்ளனர்.

 

Minister kamaraj affected by corona

 

நோய்த் தொற்றிலிருந்து பூரன நலம்பெற வேண்டும். அதேபோல அவரிடம் நிவாரணப் பொருட்களை வாங்கிய பொதுமக்களையும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.