Skip to main content

முடிவுக்கு வந்த சுருக்குமடி வலை பிரச்சனை... 8 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மயிலாடுதுறை மீனவர்கள்!

Published on 22/08/2021 | Edited on 22/08/2021

 

fish

 

சுருக்குமடி வலையை தடைசெய்ய வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 20 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை மற்றும் அதிவேக படகுகளை தடை செய்யக்கோரி கடந்த 8 நாட்களாக பல்வேறு கட்டங்களாக போராடி வந்தனர். சுருக்குமடி வலைக்கு ஆதரவு வேண்டி பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் எதிர்தரப்பாக போராடி வந்தார்கள்.  இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரு தரப்பு மீனவர்களிடையே உச்சகட்ட மோதல்போக்கு உருவானது. இந்த சம்பவத்தில் ஒரு படகு உடைத்து நொறுக்கப்பட்டது. இதில் 6 மீனவர்கள் கடலில் குதித்து உயிர்தப்பினர். இதில் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

 

fish

 

விபத்தை ஏற்படுத்திய அந்த விசைப்படகு அரசால் கடந்த 20ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அந்த படகில் இருந்த சுருக்குமடி வலையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் மீனவர்கள் தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், நேற்று அவை வாபஸ் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இனிமேல் தடை செய்யப்பட்ட படகுகளையும், வலைகளையும் பயன்படுத்த முடியாது. அப்படி நடந்தால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று 20 கிராமத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 ஆயிரம் மீனவர்கள் எட்டு நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.