சுய ஊரடங்கு என்ற பிரதமரின் அறிவிப்பை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனாவுக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
![makkal needhi maiam actor kamal hassan tweet coronavirus](http://image.nakkheeran.in/cdn/farfuture/sckhpiIJjuBF_vFgZREIAJ7_inJJELsfUMbh5a0z1Ps/1584695575/sites/default/files/inline-images/kamal_82.jpg)
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சுய ஊரடங்கு அறிவிப்பை ஏற்று பல்வேறு சங்கங்களும் நாளை மறுநாள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாளை மறுநாள் நடைபெறும் சுய ஊரடங்கை ஆதரிக்க வருமாறு ரஜினி காந்த், அஜித், விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். சுய ஊரடங்கு என்ற பிரதமரின் அறிவிப்பை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த அசாதாரண சூழலில் அசாதாரண நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டியுள்ளது. நாம் வீட்டிலேயே இருப்பதன் மூலம் கரோனா பேரழிவில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.