Published on 06/06/2018 | Edited on 06/06/2018

எஸ்.பி. விஜயகுமார், ஆய்வாளர் அம்பேத்கார்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் கஞ்சிதொட்டி அருகே கடை வாடகை எடுத்து லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக கடலூர் எஸ்.பி. விஜயகுமார் ஐ.பி.எஸ்ஸுக்கு கிடைத்த சீக்ரெட் தகவலின்படி சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்த தனிப்படை மூலம் லாட்டரி சீட்டு வாங்குவதுபோல் மாறுவேடத்தில் சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூவரை அதிரடியாக கைது செய்தனர். ஏழு செல்போன்கள் மற்றும் 35,090 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடரட்டும் ரெய்டுகள்!!!