Skip to main content

உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆறு மாதம் அவகாசம் கேட்டு மனு!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

local body election tamilnadu supreme court


தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியிருந்தது. மேலும், தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. நேற்று (03/09/2021) உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை நிர்ணயம் செய்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணை வெளியிட்டிருந்தது.

 

இந்த நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் ஆறு மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்