Skip to main content

கைக்குழந்தையைக் கொன்ற தந்தை! சந்தேகத்தால் நடந்த சோகம்!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

kanchipuram madurantakam vippedu five month old baby incident

 

காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 23). இவரது கணவர் பெயர் மணி என்கிற ரஞ்சித் குமார் (வயது 24). காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெப்பேடு கிராமத்தில் வசித்து வரும் இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் கடன் கொடுக்கும் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

கவிபிரியா தனது அத்தை மகனான மணியை காதலித்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாகத் தான் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னரே ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அதன் காரணமாக கவிபிரியா கருவுற்றிருந்தார். மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகி உள்ளன. கவிபிரியா மீது சந்தேகம் கொண்டு மணி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

 

குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்த கவிபிரியாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் குழந்தையுடன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மணிக்கும் கவிபிரியாவுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்படி ஏற்பட்ட தகராறில் மணி கவிபிரியாவை அடித்ததில் அவரது காதில் ரத்தம் வந்துள்ளது. அதன் காரணமாக கவிபிரியாவின் பெற்றோர் காஞ்சிபுரம் சென்று அவரை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில், இன்று காலை கவிபிரியாவின் வீட்டிற்கு வந்த மணி, அவருக்கு சமாதானம் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு காலை 9 மணி அளவில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பிறகு கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், மணி தனது மனைவியை அடித்துள்ளார். மேலும் தனது குழந்தையின் காலைப் பிடித்து சுவரில் அடித்துள்ளார். இதனால் குழந்தையின் பின் தலை மற்றும் முதுகு எலும்பு நொறுங்கி குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மணியை கைது செய்தனர். மேலும், குழந்தையின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். செம்மஞ்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தையை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.