Skip to main content

''அவரது இறப்பு தவிர்த்திருக்கப்பட வேண்டியது'' - ஏ.வ. வேலு பேட்டி  

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

"it should be avoided" - AV Velu interview

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு பேசுகையில், ''இன்று நான் நின்று பேசிக் கொண்டிருக்கக் கூடிய இடம் அயோத்தியதாசருக்கு மணிமண்டபம் கட்டக்கூடிய இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன். முதல்வர் 110 விதியின் கீழ் 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அயோத்திதாசருக்கு சென்னை வடபகுதியில் மணிமண்டபத்தை கட்டுகிறோம் என்று அறிவித்திருந்தார். அதற்கு பின்னால் விமான நிலையத்திற்கு பல்வேறு பணிகள் சார்பாக இந்த வழியாக போகின்ற பொழுது அவர் மீண்டும் எங்கள் துறையை அழைத்து சட்டமன்றத்தில் ஏற்கனவே வடசென்னை பகுதியில் அயோத்தியதாச பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டுவதாக குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பகுதியில்தான் பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபம், பக்தவச்சலத்தின் மணிமண்டபம், ராஜாஜி மணிமண்டபம், காந்தி மணிமண்டபம், மொழிப்போர் தியாகிகளுடைய மணிமண்டபம், ரெட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் எல்லாம் அமைந்திருக்கிறது. எனவே அந்த தலைவர்கள் வரிசையில் இங்கேயே அவருக்கு மணி மண்டபத்தை கட்டலாம் என்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இந்த இடத்தை நாங்கள் தேர்வு செய்தோம். 2 கோடியே 48 லட்சம் ரூபாயில் மணிமண்டபம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர்கள் தனியார் தொலைக்காட்சி ஊழியர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ''செய்தியாளர் முத்துகிருஷ்ணன் இறந்தது வருத்தத்திற்குரிய நிகழ்வு. அன்பு சகோதரர் இறந்துவிட்டார் என்று மனதளவில் கூட நான் வருத்தப்படுகிறேன். இன்னும் சொல்லப் போனால் சம்பந்தப்பட்ட ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு என்னுடைய வருத்தத்தை நான் பகிர்ந்து கொண்டேன். பொதுவாக ஏட்டிக்கு போட்டியாக சொல்லவில்லை. இங்கு இரண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கார்ப்பரேஷன் மூலமாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலைத்துறை மூலமாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிமிடம் வரை அவர் எந்த இடத்தில் விழுந்தார் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில் இருந்த நான் மறுநாள் காலையிலேயே அந்தப் பகுதியில் பணிகளை எல்லாம் ஆய்வு செய்த பொழுது அவர் விழுந்ததாக சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் ஏற்கனவே மேலே ஸ்லாப் போட்டு மூடப்பட்டு விட்டது. நெடுஞ்சாலைத்துறையை பொறுத்தவரை நான் இப்பொழுதே கூட்டிச் சென்று காட்டத் தயாராக இருக்கிறேன். நெடுஞ்சாலைத்துறை பணிகளில் நாங்கள் பேரி கார்ட் எல்லாம் வைத்து, இங்கு நெடுஞ்சாலை பணி நடைபெறுகிறது என்று சொல்வதோடு விபத்து வராத அளவிற்கு பாதுகாப்பாக அறிவிப்புகள் எல்லாம் வைத்திருப்போம்.

 

பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஒருமுறைக்கு பலமுறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் தொடர்ந்து அறிவுறுத்தியதின் அடிப்படையில் மாநகராட்சியாக இருந்தாலும் சரி நெடுஞ்சாலைத்துறையாக இருந்தாலும் சரி பாதுகாப்புப் பணியை பொறுத்தவரை நாங்கள் பேரி கார்ட் வைக்காமல், நெடுஞ்சாலைத்துறை பணி நடைபெறுகிறது என்று போர்டு வைக்காமல் நாங்கள் வேலை செய்வது கிடையாது. அதை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். எது எப்படி இருந்தாலும் இரவு நேரத்தில் நிகழ்ந்த சம்பவம் இதுவரை விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. நாங்களும் காவல்துறையை கூப்பிட்டு சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்யச் சொல்லி இருக்கிறோம். ஆனால் கூட அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அவரது இறப்பு என்பது வருத்தத்திற்குரியது. அவரது இறப்பு தவிர்த்திருக்கப்பட வேண்டியது. ஆனால் இது கேள்விப்பட்ட உடனே தமிழக முதல்வர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என அறிவித்துள்ளார்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.