Published on 11/04/2019 | Edited on 11/04/2019
வேலூர், காட்பாடியிலுள்ள கனரா வங்கி மேலாளர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

ஓடைபிள்ளையார் கோவில் அருகேவுள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை குறித்த தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் திருச்சி, வையம்பட்டியிலுள்ள கல்பனா என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 50 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.