Skip to main content

டி.ஐ.ஐீ அலுவலக வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல்... அதிகாரிகள் உடந்தையா?

Published on 25/10/2020 | Edited on 25/10/2020
incident in vellore

 

வேலூர் சாராக காவல்துறை தலைவரான டி.ஐ.ஜீ அலுவலகம் அண்ணாசாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே மாவட்ட ஆட்சியர் வீடு, அரசு சுற்றுலா மாளிகை, நீதிபதிகள் குடியிருப்பு போன்றவை உள்ளன. அதோடு சில முக்கிய அரசு அலுவலகங்களும் இந்த சாலையில் உள்ளன. நகரத்தின் மையத்தில் உள்ள இந்த பகுதி வழியாக திருவண்ணாமலை உட்பட தென்மாவட்டங்களுக்கான வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது.

டி.ஐ.ஐீ அலுவலக வளாகம் பரந்து விரிந்தது. இந்த அலுவலக வளாகத்தின் உள்ளே சந்தனமரங்கள், தேக்குமரங்கள் என பல மரங்கள் உள்ளன. இதில் ஒரு சந்தன மரத்தை கடந்த அக்டோபர் 23ந்தேதி இரவு வெட்டி கடத்தியதாக கூறப்படுகிறது. 24 ஆம் தேதி காலை பணிக்கு வந்த காவலர்கள் இதனைப்பார்த்துவிட்டு டி.ஐ.ஐீ காமனிக்கு தகவல் தந்துள்ளனர். அதன்பின் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட வனத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. 24 மணி நேரமும் பாதுகாப்பு உள்ள காவல்துறை சாரக அதிகாரியின் அலுவலக வளாகத்திலேயே இருந்த மரம் திருடு போயிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மாவட்டத்தின் மிக முக்கிய அரசு அதிகாரியின் அலுவலத்தில், வீட்டில் திருடு போவது புதியதல்ல. இதே வேலூரில் கடந்த 2015ல் அப்போது மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த நந்தகோபால் இருந்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கான அரசு பங்களாவில் வளர்ந்திருந்த பெரிய சந்தனமரத்தை, வெட்டி எடுத்து சென்றது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி தந்தது. கலெக்டர் பங்களாவுக்கு அருகில் அரசு சுற்றுலா மாளிகை உள்ளது. அந்த மாளிகை வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை 2016ல் வெட்டி எடுத்து சென்றிருந்தனர் மரக்கொள்ளையர்கள். இந்த இரண்டு வழக்கிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அதே பகுதியில் நாட்டை, பொதுமக்களை பாதுகாக்கும் காவல்துறையின் உயர் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்த சந்தன மரத்தையே பாதுகாக்க முடியாமல் திருடு கொடுத்துள்ளது காவல்துறை.

இதுப்பற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், சந்தனமரம் என்ன சோப்பு டப்பாவா பாக்கெட்ல எடுத்து வச்சிக்கிட்டு போறாதுக்கு. பெரியதாக வளர்ந்த மரம். அதனை மிஷின் வழியாக அறுத்து கீழே தள்ளி, அதன்பின் அதன் கிளைகளை கட் செய்துவிட்டு, பின்னர் மரத்தினை துண்டு துண்டாக்கி அதனை வாகனத்தில் ஏற்றி எடுத்து செல்ல குறைந்த பட்சம் 2 முதல் 3 மணி நேரமாகியிருக்கும். டிஐஐீ அலுவலகம் என்பது பாதுகாப்பு நிறைந்தது. அப்படியிருக்க அந்த அலுவலகத்தில் இருந்த மரத்தையே காப்பாற்ற முடியவில்லை என்பது நம்பும் படியாக இல்லை. அதிகாரிகள் துணையில்லாமல் இதனை செய்தியிருக்க சாத்தியமேயில்லை என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'காமராஜருக்கு நடந்த நிகழ்வு எனக்கும் நடந்தது'- பரப்புரையில் முதல்வர் சொன்ன சுவாரஸ்யம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'What happened to Kamaraj also happened to me' - the chief minister said interestingly in the lobby


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

பரப்புரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். வெள்ள நிவாரணம் கேட்டால் தரமாட்டார். தமிழ்நாட்டை வெறுக்கின்ற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கின்ற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக நிற்பவருமாக இருப்பார்.

இன்று காலையில் நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். நம்முடைய திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் மத்திய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுவார்கள். பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை சந்தித்தாராம். அங்கு காரை நிறுத்தி அவர்களை பக்கத்தில் வரச் சொல்லி 'இன்று பள்ளிக்கு போகவில்லையா?' என்று கேட்டார். அந்த பிள்ளைகள் 'எங்கள் குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாததால் எங்க அப்பா அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை' என்று சொல்லவும் பள்ளியில் மதிய உணவு போட்டால் அதற்காகவாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என சிந்தித்து யோசித்து காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.

எனக்கும் அதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சரானவுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஒரு குழந்தையை பார்த்து 'என்னம்மா சாப்பிட்டீங்களா' என்று எதார்த்தமா கேட்டேன். அந்த குழந்தை 'வீட்டில் அப்பா அம்மா வேலைக்கு போறாங்க, காலையில உணவு செய்ய மாட்டாங்க அதனால் சாப்பிடவில்லை' என்று சொன்னதும் எனக்கு மனசே சரியில்லை.

கோட்டைக்கு போனவுடனே அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரணும் திட்டத்தை தயார் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் ரொம்ப பணிவாக சார்  நம்ம நிதிநிலை ரொம்ப மோசமா இருக்கு. அதோடு இல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூட நாம் இதை சொல்லவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், 'வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன நம் எதிர்கால தலைமுறை குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் படிப்பது மனதில் மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதி நிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்க ஃபைலை தயார் பண்ணுங்கள்' என்று சொன்னேன். அந்த ஃபைலில் கையெழுத்து போட்ட கை தான் இந்த ஸ்டாலின் கை''என்றார்.