Skip to main content

இரு சிறுமிகளுக்கு 10-க்கும் மேற்பட்டோரால் தொடர் பாலியல் வன்கொடுமை!-விசாரணையில் அதிர்ச்சி!! 

Published on 12/10/2020 | Edited on 12/10/2020
INCIDENT IN RASIPURAM

 

 

ராசிபுரத்தில் 12,13 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் முதியவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்த 12 மற்றும் 13 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இருவர் 75 வயது மதிக்கத்தக்க முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. தந்தை இல்லாத சூழலில் தாய் பகல் மற்றும் இரவு வேளைகளில் வேலைக்கு செல்லும் நிலையில் குடும்பம் இருக்கும் நிலையில், தாய் இல்லாத நேரத்தில் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், வெளியே கூறினால் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகவும் சிறுமிகள் அக்கம்பக்கத்தினரிடம் கூற, அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் இதுதொடர்பான புகாரை குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

 

குழந்தைகள் நல அமைப்பு  சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 75 வயது மதிக்கத்தக்க அவர் முத்துசாமி கைது செய்யப்பட்டார். அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு பின் இளைஞர்கள், முதியவர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் ராசிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளாக இருக்கக்கூடிய சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்