Skip to main content

பழிக்குப் பழியாக விரட்டி வெட்டப்பட்ட ரவுடி... சுட்டுக் காப்பாற்றிய வங்கி செக்யூரிட்டி..!!!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலேயே சாவு என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக, பழிக்குப் பழியாக கொலை சம்பவங்கள் தமிழகமெங்கும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ரவுடி ஒருவரை பழிதீர்க்க ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட நிலையில், வங்கி ஒன்றின் பாதுகாவலரால் விரட்டிய ரவுடிகள் சுடப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளார் வெட்டுப்பட்ட ரவுடி.

 

manamadurai


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் தங்கராஜ். காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ள இவர் இன்று மானாமதுரை பஜார் சாலையில் நண்பர் ஒருவருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது, மூன்று இருசக்கர வாகனங்களில் பிச்சை பிள்ளையனேந்தல் தமிழ்செல்வம், ஆவரங்காட்டை சேர்ந்த ஆண்டிசெல்வம், பூமிபாலன் மற்றும் சலுப்பன ஓடை மச்சக்காளை உள்ளிட்டோருடன் ஏழு பேர் கொண்ட குழு வாகனத்தை நிறுத்தி சராமரியாக வெட்டத் தொடங்கியது. இதில் தங்கராஜின் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மாறாக உடலெங்கும் வெட்டுப்பட்ட நிலையில்,  உடன் வந்த நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட உயிருக்குப் பயந்து அங்கிருந்து தப்பி ஓடத் தொடங்கி அருகில் முதல் தளத்தில் இயங்கி வந்த கனரா வங்கிக்கு சென்று தஞ்சமடைந்துள்ளார். தங்கராஜை துரத்தி சென்ற தமிழ்செல்வம் தலைமையிலான குழு வங்கியினுள்ளே சென்று வெட்டத் தொடங்கியிருக்கின்றது. அங்கிருந்த வங்கி செக்யூரிட்டி செல்வ நேரு எச்சரித்தும் கேளாததால் தமிழ்செல்வத்தின் காலை நோக்கி சுட்டுக் காயப்படுத்த அனைவரும் தப்பியோடியுள்ளனர். இதில் காயமடைந்த ரவுடி தமிழ்செல்வம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தங்கராஜோ சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

manamadurai


 "ஒப்பந்ததாரராகவும், அமமுக மானாமதுரை மேற்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்து வந்தவர் சரவணன். இவர் கடந்த மே 26-ஆம் தேதி காலை மானாமதுரை புறவழிச்சாலையில் நடைபயிற்சி சென்ற நிலையில் சரவணனை வெட்டிக்கொன்றனர் சிலர். இந்தக் கொலையில் தங்கராஜ் தலையிட்டிருக்கலாம் என அதற்குப் பழிவாங்கும் விதமாக இப்பொழுது செயல்பட்டிருக்கின்றது தமிழ்ச்செல்வம் தலைமையிலான டீம்." என மானாமதுரை டி.எஸ்.பி.தலைமையிலான போலீஸ் டீம் குற்றவாளிகளை தேடி வருகின்றது. பட்டப்பகலிலே நடந்துள்ள இச்சம்பவத்தால் மானாமதுரையில் பதற்றம் தொற்றியுள்ளது.

 

 

 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.