Skip to main content

வயதான தாய் தந்தையைப் பராமரிக்காவிட்டால் இதுதான் கதி... -சப் கலெக்டர் அதிரடி!

Published on 22/12/2019 | Edited on 22/12/2019

நெல்லையின் பாளையங்கோட்டையிலுள்ள மனகாவலம் பிள்ளை நகரைச் சேர்ந்த பூதத்தான்(85). அடிப்படையில் கொத்தனார் வேலை பார்த்தவர். இவருக்கு அம்மா பொண்ணு, பார்வதி என்று இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். இரண்டாவது மனைவிக்கு முருகன் என்ற மகன், செல்வி என்ற மகள் உள்ளனர்.

இந்தநிலையில் பூதத்தானுக்கு வயது முதிர்வு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. தனக்கு சொந்தமான வீடு மற்றும் 8 சென்ட் இடத்தை விருப்பமின்றி தனது இரண்டாவது மனைவியின் மகன் முருகனுக்கு எழுதிக்கொடுத்தார். சொத்தை வாங்கிய மகன் வயது முதிர்ந்த தன் தந்தையைக் கவனிக்காமல் புறக்கணித்தார். 

 

If the elderly mother does not care for her father, this is state... -Sub Collector Action!

 

நோயால் தவித்த பூதத்தான் தன் முதல் மனைவி மகனுடன் வாழ்ந்திருக்கிறார். மேலும் இதுகுறித்து முதியவர் பூதத்தான் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின் மூலம், தன்னைப் பராமரிக்காமல் தவிக்கவிட்ட மகனிடமிருந்து தன் வீடு மற்றும் 8 சென்ட் இடத்தை மீட்டுத் தர வேண்டும் என்று நோய்வாய்ப்பட்ட நிலையில் இந்த வீட்டினை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து கொள்வேன் என்றும் வழக்கறிஞர் ஜெனி மூலம் சப் கலெக்டர் மணிஷ் நாரணவரேயிடம் புகார் மனு கொடுத்தார்.

இதனடிப்படையில் சப் கலெக்டர் விசாரணை நடத்தி மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007 பிரிவு 23ன் படி பூதத்தான் மகன் முருகன் அவரது மனைவி பெயருக்கு மாற்றப்பட்டிருந்த 75 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 8 சென்ட் இடம் கொண்ட சொத்து செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து சட்டப்படி பூதத்தான் பெயருக்கு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் மாற்றி ஒப்படைத்தார். 

வாழ்வு கிடைத்த பூதத்தான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தந்தையைத் தவிக்க விட்ட மகனுக்கு இது தான் சாட்டையடி. இந்த வழக்கை இரண்டே மாதத்திற்குள் முடிக்க தேவையான நடவடிக்கைகளை  மேற்கொண்ட எனக்கு, தற்போது வயது முதிர்ந்தவருக்கு மீட்டுக்கொடுத்ததில் எனக்கு பெரிய ஆத்ம திருப்தி என்கிறார் வழக்கறிஞர் ஜெனி.

அடுத்தவருக்கு தாராளமாக அள்ளிக் கொடுப்பதைவிட, வயது முதிர்ந்த தாய் தந்தையரை அனாதை இல்லத்திற்கு அனுப்பாமலிருப்பதே ஒரு மகனுக்கு மிகப் பெரிய புண்ணியமாகும் என்கிறது வேதங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.