Skip to main content

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கை டிச.20க்குள் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 02/08/2021 | Edited on 02/08/2021
gj

 

தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், கடந்த ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்புக்காக உடன் சென்றார். அப்போது, ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி -யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி போலீஸார். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் விழுப்புரம் நீதிமன்றம், வழக்கை டிசம்பர் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்