Skip to main content

மழை நீரில் மிதக்கும் அரசுப் பள்ளி... நடவடிக்கை எடுக்குமா அரசு?

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

வடகிழக்கு பருவமழை கடந்த சிலநாட்களாக பெய்து வருகிறது. மழை வந்த பிறகே முன் எச்சரிக்கை என்ற பெயரிலும் மீட்பு நடவடிக்கை அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

பள்ளிகள், அரசு அலுவலகம் என்று அனைத்துமே ஒவ்வொரு மழைக்கும் தெப்பக்குளமாக மாறிவிடுகிறது என்பதை ஒவ்வொரு முறையும் பார்க்கும் அதிகாரிகள் மழைக்காலம் போனதும் அதை மறந்துவிடுகிறார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் அவதிப்படுவதும் நோயால் பாதிக்கப்படுவதும் மாணவர்கள்தான்.

 

Government school floating in rain water ... Will the government take action?


புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. கிழக்கு கடற்கரைப் பகுதியான கட்டுமாவடி, கிருஷ்ணாசிப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம், உள்ளிட்ட கடலோர கிராமங்கள் ஏரிகள் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்து கிராமங்களை சூழ்ந்தது. அதனால் மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர். இதற்கு என்ன காரணம் ஏரிகள் நிரம்பிய பிறகு கூடுதலாக வரும் தண்ணீர் வெளியேறும் வடிகால் வாரிகள் முழுமையாக கட்டிடங்களாலும், தடுப்பு சுவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே. அவசர உதவி மையங்கள் கூட வடிகால் வாரிகளில்தான் கட்டப்பட்டுள்ளது. மழை முடிந்த பிறகு அவற்றை சீரமைக்க அதிகாரிகள் தவறிவிடுகின்றனர். அதனால் வடிகால் தண்ணீர் கடலுக்கு நேரடியாக செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சப்படுத்தி வெளியேற்றிவிட்டு கடலுக்கு செல்கிறது.

 

Government school floating in rain water ... Will the government take action?


அதேபோல அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலகம் பல வருடங்களாக முழுமையாக தண்ணீரில் தத்தளிக்கிறது. அந்த தண்ணீர் வெளியேறிச் சென்ற வடிகால் வாரிகள் காணாமல் போனதால் இன்றும் அந்த அவல நிலை தொடர்கிறது. அதேபோல மணமேல்குடி அரசுமேல்நிலைப்பள்ளி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து சாக்கடையாக காட்சி அளிக்கிறது. பள்ளி வளாகங்களில் பலநாட்களாக தண்ணீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் கொசு உற்பத்தியாகி மாணவர்களுக்கு காய்ச்சல் பொன்ற நோய்களையும் உற்பத்தி செய்கிறது.

 

Government school floating in rain water ... Will the government take action?


இனிமேலாவது பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றும் நடவடிக்கை எடுத்தால் மாணவர்களை நோய்களில் இருந்து காப்பாற்றலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.