Skip to main content

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பெரும் தீ விபத்து

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீ விபத்து ஏற்பட்டு நெருப்பு பற்றி எரிந்து வருகிறது.

 

 

 A fire broke out in Valluvarkotam in Chennai

 

 

 A fire broke out in Valluvarkotam in Chennai

 

தீயணைக்கும் தீயணைப்பு வீரர்கள் பற்றி எரியும் தீயை அணைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்க செய்யப்பட்டுள்ளது.

 

5 தீயணைப்பு வாகனங்களின் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள அந்த தொழிற்சாலை கட்டிடத்துக்குள் மனிதர்கள் யாரும் இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதேபோல் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளது.

 

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு போலீசார் நடத்தும் முழுமையான விசாரணைக்கு பிறகு எப்படி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது என தெரியவரும். தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியை சுற்றி குடியிருப்பு பகுதிகள்  இருப்பதால்  அங்கே  வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக வள்ளுவர் கோட்டம் பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது

      

 

 

சார்ந்த செய்திகள்