Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; வீடு புகுந்து வெட்டியவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

 Father and son sentenced to 7 years in jail for home invasion in Trichy

 

திருமணத்தை மீறிய உறவில் இருந்தவரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டியவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி ஏர்போர்ட் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் தங்கைக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பாஸ்கரன் (30) அவரது தந்தை உபகாரனும்(55) கடந்த 2019 ஆம் ஆண்டு சரவணகுமாரின் வீட்டுக்குள் நுழைந்து சரவணகுமாரை வெட்டியுள்ளார் பாஸ்கர். மேலும் உபகாரனும் கத்தியால் இரண்டு முறை வயிற்றில் குத்தியுள்ளார். இதனைப் பார்த்த சரவணகுமாரின் மகன்கள் கர்ணன் மற்றும் மகேஷ் கார்த்திக் ஆகியோர் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர்.

 

இச்சம்பவம் குறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சரவணகுமாரின் மகன் கர்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து வழக்கானது தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனா சுந்தரி, சரவணகுமாரை கொல்ல முயற்சி செய்த பாஸ்கர் மற்றும் அவரது தந்தை உபகாரன் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இருவருக்கும் தலா 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்