Skip to main content

''முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்'' - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

dmk

 

இந்தியாவில் இரண்டாம் அலையாக கரோனா பரவி வரும் நிலையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

 

இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் ''சகோதரர் ராகுல்காந்தி கரோனாவால் பாதிக்கப்பட்டது கவலையளிக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல்காந்தி விரைந்து நலம்பெற வேண்டும். அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். 

 

 

சார்ந்த செய்திகள்