Skip to main content

குடிபோதையில் 'நெருங்கிய' தந்தை; ஆட்டுக்கல்லால் அடித்துக்கொன்ற மகள்! சேலம் அருகே பரபரப்பு!!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

சேலம் அருகே, குடிபோதையில் பெற்ற மகளென்றும் பாராமல் தவறாக நடக்க முயன்ற தந்தையை, தற்காப்புக்காக ஆட்டுக்கல்லால் தாக்கி மகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆவடத்தூர் ராஜாகோயில் வலவு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் படவெட்டி (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நளா (37). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

 

 Drunken 'close-up' father; Daughter beaten;near Salem

 

படவெட்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அதனால் அவர் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததால், அவருடைய மனைவி நளா, தன் இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஆனாலும், மாமியார் வீட்டுக்குச் சென்று அங்கேயும் படவெட்டி அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுட்டு வந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை (பிப். 26) இரவு குடிபோதையில் மனைவியைப் பார்க்கச் சென்ற படவெட்டி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதோடு, அவரை வீட்டுக்குள் தள்ளி, கதவை வெளிப்புறமாக தாழிட்டார்.

பின்னர், வெளியே நின்றிருந்த தனது மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். குடிபோதையில் இருந்த தந்தையை கீழே தள்ளிய மகள், அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் பலமாக தாக்கினார். அதன் பின்னரும் மகளிடம் பலவந்தப்படுத்தினார். வேறுவழியின்றி அருகில் இருந்த ஆட்டுக்கல்லை தூக்கி தந்தையின் தலை மீது போட்டார். இதில் படவெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன்பின், வீட்டுக்குள் அடைப்பட்டிருந்த தனது தாயை மீட்ட மூத்த மகள், ஜலகண்டாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நளா, அவருடைய இரு மகள்கள் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட படவெட்டி, ஏற்கனவே சில முறை தனது மூத்த மகளிடம் தவறாக நடக்க முயற்சித்திருப்பது தெரிய வந்தது. சம்பவத்தன்றும், தன்னை பாதுகாத்துக் கொள்ளவே ஆட்டுக்கல்லை தூக்கி தந்தை தலையில் போட்டதாகக் கூறியுள்ளார்.

குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை, மகளாலேயே கொல்லப்பட்ட சம்பவம் ஆவடத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.