Published on 05/12/2018 | Edited on 05/12/2018

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை சமபந்தப்பட்டவர்களிடம் கல்லூரி நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் பணியாற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழை வைத்திருக்க கூடாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு நகல்களை வைத்து கொண்டு அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.