Skip to main content

திமுகவில் மீண்டும் தன்னை இணைக்க வேண்டும்.. நாளை மதுரையில் அழகிரி தன் ஆதரவாளர்களுடன் கையெழுத்து இயக்கம்??

Published on 14/09/2018 | Edited on 15/09/2018

 

 

alagiri

 

நாளை மதுரையில் அழகிரி, தன்னை திமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ளபட்டவேண்டும் என்ற  கோரிக்கையை முன்னெடுக்கும் வகையில் தனது ஆதரவாளர்களை திரட்டி மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

 

இதன்படி நாளை காலை மதுரையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தனது ஆதரவாளர்கள் 1000 பேர் மத்தியில் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்து தன்னை திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்ட வேண்டும் என்ற காரணியை முன்வைத்து இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தான் திமுக தவிர எந்த கட்சியிலும் சேரமாட்டேன் புதுக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணமும் இல்லை என்பதை தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.    

சார்ந்த செய்திகள்