Published on 22/02/2022 | Edited on 22/02/2022

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128 நகராட்சிகளிலும், அதிமுக 6 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அதிமுக 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற வார்டுகள் விவரம்:
மொத்த வார்டுகள் 33
திமுக 25
அதிமுக 5
மதிமுக 1
காங்கிரஸ் 1
விடுதலைச் சிறுத்தைகள் 1