Skip to main content

பொள்ளாச்சி சம்பவத்திற்கு யார் காரணம்? அர்ஜூன் சம்பத் கண்டுபிடித்துவிட்டாராம்!!

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

 


திமுக, இடதுசாரிகள் கட்சியினர் தமிழ்ச்சமூகத்தின் மீது நடத்திய பண்பாட்டு, கலாச்சார சீரழிவுகள்தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.


இந்து மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை (மார்ச் 30, 2019) நடந்தது. அப்போது அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது:

 

ar


வரும் மக்களவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். பகவான் கிருஷ்ணன், இந்துக்களின் அடையாளம். அவர் இந்து மதத்தின் குறியீடு. அவரைப்பற்றி தி.க. தலைவர் கி.வீரமணி அவதூறாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக காவல்துறையினர் கி.வீரமணியை கைது செய்ய வேண்டும்.


தேர்தல் பரப்புரையின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்றும், ராகுல்காந்தி ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்றும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். நடைமுறையில் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கொடுத்து, வாக்கு  சேகரித்து வருகின்றனர். அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


2ஜி ஊழல் பணமும், திமுகவினரின் சாராய ஆலைகளில் இருந்து கிடைக்கும் பணத்தையும் வைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றும் வேலைகளில் இறங்கியுள்ளனர். கோவையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். திமுகவினர், அரசியலில் அநாகரிகத்தை கடைபிடிக்கின்றனர். திமுக, திக, இடதுசாரிகள் ஆகியோர் காதலர் தினம் கொண்டாடுவது, தாலி கட்டிக்கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை ஆதரிப்பது, தாலியைக் கழற்றுவது போன்ற செயல்கள் மூலம் சமூக சீரழிவை ஏற்படுத்துகின்றனர்.


சேலத்தில் கொல்லப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும். அவருடைய உருவப்படத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வோம். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு, திமுக மற்றும் இடதுசாரிகள் தமிழ்ச்சமூகத்தின் மீது ஏற்படுத்தி பண்பாட்டு, கலாச்சார சீரழிவுகள்தான் முக்கிய காரணம். கோடநாடு சம்பவத்தில் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு யார் ஜாமின் கொடுத்தார்கள் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியினருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.