விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாகக் குழு கலைக்கப்படுவதாக பால்வளத்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவின் நிறுவனம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 17 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. 2020-2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு மேலாளர்கள் உட்பட 25 பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டது அம்பலமானது. பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது விருதுநகர் ஆவின் நிர்வாகக் குழுவை கலைத்திடுவதாக பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.