Skip to main content

பழனி பாலியல் துன்புறுத்தல் வழக்கு... டி.ஐ.ஜி. விஜயகுமாரி பகீர் பேட்டி!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
Palani sexual harassment case ... DIG Interview with Vijayakumari

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு கேரளாவிலிருந்து வந்த பெண்ணை மூன்று பேர் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அண்மையில் புகார் எழுந்தது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்தும் வாங்க மறுத்ததால், கேரளாவில் உள்ள சொந்த ஊரான கண்ணூர் சென்ற அந்தப் பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கும் போது இந்த விஷயத்தைக் கூறியதாக தகவல்கள் பரவின. அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் பழனிக்கு சென்ற திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி பத்திரிகையாளரிடம் கூறுகையில், "19ம் தேதி தங்கம்மாள், தர்மராஜ் ஆகிய இருவரும் பழனியில் தங்கியிருந்த விடுதியில் மதுபோதையில் தகராறு செய்ததால் விடுதி உரிமையாளர் அவர்களை வெளியேற்றி விட்டதாகவும், அதன்பிறகு 25ம்தேதி வரை இருவரும் பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சர்வசாதாரணமாக உலா வந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார். மேலும், விடுதி உரிமையாளரிடம் தர்மராஜ் பணம் பறிக்கும் நோக்கத்தில் கேரள காவல்துறை பெயரைப் பயன்படுத்தி விடுதி உரிமையாளரை மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

 

குறிப்பிட்ட தங்கும் விடுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தர்மராஜுடைய சகோதரியிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவருக்கும் திருமணமாகவில்லை என்பதும், இருவரும் கணவன் மனைவி அல்ல என்ற உண்மையும் தெரியவந்துள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணுக்குக் கூட்டுப்பாலியல் வன்புணர்வு நடந்ததற்கான எவ்வித உடல் காயங்களும், பிறப்புறுப்பில் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தவழக்கு தொடர்பாக விசாரணை செய்ய தமிழகக் காவல்துறை சார்பில் திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் கேரளாவிற்கு விரைந்துள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணிடம் 164 பிரிவின் கீழ் கேரள போலீஸார் நடத்திய ரகசிய விசாரணை குறித்த ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்” என்று கூறினார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.