Skip to main content

 நலிந்தோருக்கு வீடு வீடாக சென்று 2 ஆயிரம் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

 


அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கினார்.

 

ச்ச்

 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ’’தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே தலைமையாக செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக நிறைவேற்றி வருகிறார்கள். தமிழகத்தில் நலிந்தோருக்கான ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும். 1 கோடி பேருக்கு வீடு வீடாகச் சென்று இந்த 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கியது. தமிழக அரசு தான்’’என்று தெரிவித்தார்.                                                             

சார்ந்த செய்திகள்