Skip to main content

வரலாற்றுப் பொக்கிஷமாக விளங்கும் தேவன்குறிச்சி மலை!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

சர்வதேச தொல்லியல் தினத்தை முன்னிட்டு அறிவோம் வரலாறு, காப்போம் தொன்மையை என்ற நோக்கில் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டியில் வரலாற்று மரபு நடை தொடங்கப்பட்டது.பரணிதரன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது,

 

Devancurichi Mountain - A Historical Treasure

 

தே.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி மலை ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாக விளங்குகிறது. இங்கு 1976 இல் மத்திய தொல்லியல்துறை நடத்திய அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கற்கருவிகள் கண்டெடுக்கப்படுள்ளன. அந்த எச்சங்கள் இன்றளவும் பாதுகாப்பின்றி காணப்படுகின்றன.

இம்மலையில் சமணத் துறவிகள் வாழ்ந்த தடயங்களும் இருக்கின்றன. சமணத் துறவிகள் கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதற்கு ஆதாரமாக சமணப்புடவும், சமணப் படுக்கைகளும், மகாவீரரின் நின்ற மற்றும் அமர்ந்த நிலையிலான சிற்பங்களும் இங்கு உள்ளன. சமய மறுமலர்ச்சி காலத்திற்குப் பின் இவை சைவ மதத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

Devancurichi Mountain - A Historical Treasure


கி.பி.13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் இங்கு சிவாலயம் கட்டப்பட்டது என்பதற்கு கோயில் சுவரில் உள்ள கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இக்கோயிலின் முந்தைய பெயர் திருவாற்றேசவரமுடைய நாயனார் கோயில் என்றும், ஊரின் பழைய பெயர் செங்குன்ற நாட்டு பெருங்குன்றத்தூர் என்றும் கோயில் கோட்டைச் சுவரில் உள்ள துண்டுக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறை பாண்டியர் காலத்திலும், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்டுள்ளன.

 

Devancurichi Mountain - A Historical Treasure


கோயிலைச் சுற்றி 8 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் பூஜைக்கும், விளக்கு ஏற்றுவதற்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட விவரம் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவு வாயிலில் கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் காணப்படுகிறது. மலைப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் புலிகளிடமிருந்து மக்களைக் காத்து உயிர் நீத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட புலிகுத்திப்பட்டான் கல்லாக இது உள்ளது. இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்திட்டையும் உள்ளது. இம்மலையின் உச்சியில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில் உள்ளது. ஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது இவ்வூருக்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது என்றார்.

 

Devancurichi Mountain - A Historical Treasure

 

நிகழ்ச்சியில் ரெங்கசாமி நன்றி கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரியச் சிறப்புள்ள இடங்களைப் பார்வையிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக பாஜக தலைவரின் லண்டன் மர்மம் ! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Tamil Nadu BJP President to go to London

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி, தேர்தலுக்காக தலைமை கொடுத்த பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜகவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டெல்லி தலைமை தொகுதி வாரியாக தகவல்களை சேகரித்து வருகிறது. 

இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்த பயணம் என சொல்லப்படும் நிலையில், 5 மாதம் இந்தியாவில் இருக்கமாட்டார் என்றும், மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் தான் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 5 மாதங்களில் தமிழக பாஜக தலைமையில்லாமல் இருக்குமா? அல்லது வேறு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்கிற கேள்வி கட்சியின் மேல் மட்டத்தில் எழுந்திருக்கிறது. 

அதேசமயம்,  தலைமையில்லாமல் இருக்கும் அந்த 5 மாதங்களும் பாஜகவை  வழிநடத்த உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக தலைவர் சென்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கிடைத்த 500 ஸ்வீட்ஸ்  பாக்ஸ்களை லண்டனில் பயன்படுத்தவும் இந்த படிப்பு பயணத்தில் திட்டமிட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்களில் பரவியுள்ளது.

Next Story

11 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Rain alert for 11 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.