Skip to main content

இறந்த மாமியார் உடலை பார்த்த சோகத்தில் இறந்து போன மருமகள்

Published on 26/08/2018 | Edited on 26/08/2018
maa

 

இந்த தலைப்பை பார்த்ததுமே ஆச்சரியப்படாத ஒருவர் கூட இருக்க முடியாது ஏன் என்றால் மாமியார் மருமகள் சண்டை என்பது நம்முடைய குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட ஒன்று. இவர்கள் எப்போதும் எலியும் பூனையுமாக தான் இருப்பார்கள் என்பது உலக வரலாறு. 

 

திருச்சி புத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் மரியஆரோக்கியதாஸ். இவருடைய மனைவி ஜெயமேரி வயது 90 இவர்களுக்கு ஆல்பர்ட், ஜேம்ஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஆல்பர்ட் காதிகிராப்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதே பகுதியில் உள்ள சி.இ. பள்ளி ஒன்றின் தாளாளராக உள்ளார் ஜேம்ஸ் என்பவர். 

 

ஆல்பர்ட்டின் மனைவி சுசீலா இவருக்கு வயது 58 இவர்களுக்கு குழந்தை இல்லை. சுசீலா கணவரோடு பாலக்கரை பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் ஜெயமேரி வயசான காரணத்தினால் உடலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். அவருடைய உடல் புத்தூர் வண்ணாரபேட்டையில் உள்ள சி.இ. பள்ளியில் வைக்கப்பட்டது. பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தி வந்தனர். 

 

இதையடுத்து ஜெயமேரியின் உடலை பார்க்க சுசீலா அங்கு வந்தார். மாமியாரின் உடலை பார்த்து அதிர்ச்சியில் கண்கலங்கி கதறி கொண்டே அப்படியே திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு காரில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

இதனால் மாமியார் உடல் வைக்கப்பட்டிருந்தே அதே சி.இ. பள்ளியில் மருமகளின் உடலும் வைக்கப்பட்டிருந்தது. மாமியார் மரணம் சோகத்தில் மருமகளும் இறந்த சம்பவம் திருச்சியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்