Skip to main content

'அம்பன்' புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம் (படங்கள்)

Published on 19/05/2020 | Edited on 20/05/2020

 


'அம்பன்' புயல் காரணமாகச் சென்னையில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் கடல்அலை பல அடி உயரத்துக்கு சீறி எழுகின்றன. எண்ணூர் கடற்கரை சாலையில் தடுப்புக் கற்களைத் தாண்டி கடல் நீர் சாலையில் வந்து விழுகிறது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் நேற்றே எச்சரித்திருந்தனர். இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

 

சார்ந்த செய்திகள்