Skip to main content

பசியோடு மனு கொடுக்க வந்தவரை பசியாற வைத்த காவல்துறை அதிகாரி

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

cuddalore police officer humanity incident

 

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பால்ராஜ் (80) என்பவர் அழுதபடியே இருந்துள்ளார். அப்போது கண்காணிப்பாளர்  ராஜாராம் ஏன் அழுகிறீர்கள்? எந்த ஊர்; என்ன விவரம் என்று பறிவோடு கேட்டுள்ளார். பெரியவர் பால்ராஜ் தனது சொந்த ஊர் ஆனைகுப்பம் எனக்கு ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர். அவர்கள் வயதான காலத்தில் எனக்கு சாப்பிட உதவி செய்வதில்லை. பணமும் கொடுப்பதில்லை என்று கூறி கண் கலங்கியுள்ளார்.

 

அதோடு அன்று காலை மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க வெறும் வயிற்று பசியோடு வந்துள்ளார். இதை அறிந்து மனம் கலங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரியவர் பால்ராஜை அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பெரியவரை அமர வைத்து தனது சொந்த செலவில் உணவுகளை வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தார். பெரியவர் பால்ராஜ் சாப்பிடும்போது எஸ்.பி எதிரில் அமர்ந்து கனிவுடன் அவரை பார்த்துக் ,கொண்டிருந்தார் கண்காணிப்பாளர்.

 

சாப்பிட்டு முடித்ததும் அவருக்கு ஆறுதல் கூறிய எஸ்.பி தங்கள் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது ராமாபுரத்தைச் சேர்ந்த 71 வயது ரங்கையைன் என்பவர் தனக்கு வரும் பென்ஷன் பணத்தை தனக்கு நெருங்கிய ஒருவர் வாங்கிக் கொண்டு தர மறுத்து மிரட்டி வருவதாக கூறியுள்ளார். அவரைப் பற்றி விசாரித்த எஸ்.பி ராஜாராம் ரங்கையனுக்கு டீ வாங்கிக் கொடுத்து அவர் புகாரை வாங்கி படித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அந்த இரு பெரியவர்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

 

காவல்துறை அதிகாரிகள் எப்போதும் மிடுக்காக காட்சியளிப்பார்கள். பேச்சிலும் ஒரு கராத்தன்மை இருக்கும். இதைத்தான் எங்கள் காலத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த அதிகாரி மிகவும் மென்மையாக பேசி எங்கள் குடும்பத்து பிள்ளைகளை போல எங்களிடம் அன்பு காட்டி, உணவு வாங்கிக் கொடுத்து, எங்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியது மிகவும் தெம்பாக உள்ளது. எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு இவரைப் போன்ற மனிதாபமான மிக்க அதிகாரிகள் இன்னும் அதிக அளவில் உருவாகி உதவி புரிய வேண்டும் என்கிறார்கள் முதியவர்களான பால்ராஜ், ரங்கையன் ஆகியோர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.