Skip to main content

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்தார் - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562லிருந்து 606 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

 

 corona virus - Tamilnadu - Minister Vijayabaskar tweet

 

 

தமிழகத்தில் 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் ஒருவர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குணமடைந்தவர் டெல்லியில் இருந்து வந்த நபர் என்றும், இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    

சார்ந்த செய்திகள்