Skip to main content

வைரஸை உடம்பிலிருந்து வெளியேற்றும் உத்தி! -நம்பிக்கையூட்டும் பேராசியர்

Published on 30/03/2020 | Edited on 31/03/2020

 

நம் தற்காப்பையும் மீறி, நம் உடலுக்குள் கரோனா வைரஸ் புகுந்துவிட்டால் நாம் அடுத்து உடனடியாக என்ன செய்யவேண்டும்? என்பதைச் சொல்லி சற்றே நம்பிக்கை ஊட்டுகிறார் ஒரு வேதியியல் துறைப் பேராசிரியர்.


நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளால், எல்லோரும் திகிலில் உறைந்திருக்கும் இந்த நேரத்தில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறையின் தலைவரான பேராசிரியர் செ.கண்ணன் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

 

ffff



அதில் அவர்... ’கொரோனா வைரஸ் மூக்கு வழியாக உடலினுள் செல்லக் கூடியது. இவ்வாறு மூச்சுக் காற்றில் கலந்து செல்லும் போது முதலில் மூக்கில்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மூக்கில் அடைப்பு ஏற்படும். இந்த அறிகுறி தெரிந்தவுடன் எந்த மூக்கில் அடைப்பு தென்படுகிறதோ, அதற்கு அடுத்த மூக்கு துவாரத்தை விரலால் அழுத்தி பிடித்துக் கொண்டு ஆள்காட்டி விரலை அடைப்பு ஏற்பட்ட மூக்கில் மேல் அழுத்தமாய் வைத்து மூச்சுக் காற்றை வேகமாக வெளியேற்ற வேண்டும். 
 

அப்படி வெளியேற்றும் போது ஆள்காட்டி விரலை விட்டு விட்டு அழுத்த வேண்டும்.  இப்படி அழுத்தும் எண்ணிக்கை ஒரு நொடிக்கு 2 முதல் 4 முறை இருத்தல் அவசியம். இந்த முறையை அரை நிமிட அளவிற்குத் தொடரலாம். அடைப்பின் தன்மையைப் பொறுத்து கால அளவை நிர்ணயிக்கலாம். இவ்வாறு செய்வதால் எடை மிக குறைந்து காற்றின் அழுத்தம் தாங்காமல் மூச்சில் இருந்து வைரஸ் வெளியேறிவிடும்.     
 


இதையும் தாண்டி தொண்டைப் பகுதிக்கு சென்றுவிட்டால், தொண்டையில் அரிப்பு, எரிச்சல் ஏற்படும். இப்படிப்பட்ட அறிகுறி இருந்தால் சமையலுக்குப் பயன்படுத்தும் சீரகத்தை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதன் மூலம், வருகின்ற சாறை எரிச்சல் இருக்கும் இடத்தில் படும்படி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தொண்டையில் இருந்து வைரஸ் வெளியேறிவிடும். 
 

இப்படி செய்யும்போது தண்ணீர் அருந்துதல் கூடாது. இந்த உத்தியைக் கையாண்டால் வைரசை உடலிலிருந்து ஆரம்பத்திலேயே வெளியேற்றிவிடலாம். இந்த வைரஸ் நுரையீரலுக்குச் சென்று விட்டால் அது 14 நாட்கள் தங்கி இருந்து சளி தொல்லை காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டும். அதற்கு முன்னால் இதை வெளியேற்றி விட்டால் நாம் வைரஸில் இருந்து தப்பித்து விடலாம்’ என்று தெரிவித்திருக்கிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

“போராட்டம் நடத்துவோம்...” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Anna University professors say they will struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும், மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழளளங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தை திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ரூட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட. 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம் (டீனிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.