Skip to main content

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கரோனா தொற்று! 

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

Corona infection in DMK treasurer TR Balu

 

தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது.

 

இந்நிலையில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா  தெரிவித்துள்ளார். சில தினத்திற்கு முன்பு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை முடிந்து இன்று (14.04.2021) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்