தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. இதில் 866 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாகச் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சுமார் 451 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 130 பேர் குணமடைந்துள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விவரங்களை மண்டலம் வாரியாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ராயபுரத்தில் 28 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் திரு.வி.க. நகர்- 25, கோடம்பாக்கம்- 17, அண்ணா நகர்- 15, தண்டையார்பேட்டை- 14, பெருங்குடி- 4, அடையாறு- 4, திருவொற்றியூர்- 4, வளசரவாக்கம்- 4, மாதவரம்- 3, ஆலந்தூர்- 2, தேனாம்பேட்டை- 8, சோழிங்கநல்லூர்- 2 பேர் என மொத்தம் 130 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.