Skip to main content

முதல்வரின் அறிவிப்பு; நன்றி சொன்ன முல்லைப் பெரியாறு விவசாய சங்கங்கள் 

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

தென்மாவட்டத்தில் உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் கட்டி கொடுத்திருக்கிறார்.  

 

இப்படி முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த பென்னிகுவிக்கை இந்த ஐந்து மாவட்ட விவசாயிகளும், பொது மக்களும் கடவுளாக எண்ணி தங்கள் கடைகளுக்கும் பிள்ளைகளுக்கும் பென்னிகுவிக் பெயரவே தொடர்ந்து வைத்து வருகிறார்கள். அதுபோல் பென்னிகுவிக் பிறந்த நாளான டிசம்பர் 16ஆம் தேதி நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை பொங்கல் வைத்து தங்கள் வீட்டு விழா போல் கொண்டாடுவது வழக்கம். லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் பொங்கல் வைத்து விழா கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கடந்த 16ஆம் தேதி பட்டி தொட்டி முதல் மணி மண்டபம் வரை பொது மக்களும், விவசாயிகளும் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். 

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

கடந்த அதிமுக ஆட்சியில் பென்னிகுவிக் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல், இந்தாண்டும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சரவணகுமார், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோர் அரசு சார்பில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான முத்துராமலிங்கம் உள்பட விவசாய சங்க நிர்வாகிகளும் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.சும் பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்தினார். பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கர்னல் பென்னிகுவிக்குக்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் உள்ள பூங்காவில் சிலை வைக்கப்படும்; அதற்கான பணிகளை இங்கிலாந்திலுள்ள தமிழர்கள் மூலம் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்று கூறினார். அதைக்கேட்டு 5 மாவட்ட விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

இது சம்பந்தமாக ஐந்து மாவட்ட விவசாயச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொன்காட்சிக் கண்ணனிடம் கேட்டபோது, “இங்கிலாந்தில் பிறந்தும்கூட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்துதான் முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் எங்களுக்காக கட்டிக் கொடுத்துவிட்டுப்போனார். அந்த நன்றியை உலகம் இருக்கும்வரை தென்மாவட்ட மக்கள் மறக்க மாட்டார்கள். ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த கர்னல் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தியதின் பேரில்தான் லோயர் கேம்பில் மணிமண்டபம் கட்டி பென்னிகுவிக் சிலையையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அதுபோல் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு இங்கிலாந்து நாட்டிலேயே சிலை வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதற்காக 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பிலும் பொது மக்கள் சார்பிலும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

கடந்த இரண்டு  மாதங்களுக்கு முன்பு நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முல்லைப் பெரியார் அணையை நேரில் சென்று ஆய்வு செய்துவந்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

நமக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை வருடத்திற்கு ஒரு முறையாவது முதல்வர், அமைச்சர்கள் யாராவது ஒருவர் நேரில் பார்த்து வந்தால்தான் கேரளாக்காரர்களுக்கு பயம் இருக்கும். தற்போது 142 அடியிலிருந்து 152 அடிவரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்க முடியும். கடந்த காலங்களில் தேக்கடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று ரசித்து இருக்கிறார்கள். அதுபோல் பள்ளி மாணவ மாணவிகள்கூட முல்லைப் பெரியாறு அணையைப் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். நானும் மூன்று முறை மாணவப் பருவத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு போய் வந்திருக்கிறேன். அந்த அளவுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடுவது பயனுள்ளதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளையும் மாணவ மாணவிகளையும் அனுமதிக்காமல் வெறும் போட்டிங் மட்டும் போய்வரும் நிலை தற்போது இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, தமிழக முதல்வரும் கேரளா முதல்வரும் பேசி மீண்டும் முல்லைப் பெரியாறு அணை வரை சுற்றுலா பயணிகள் போய் வர அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.