Skip to main content

எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

chennai elizhagam dvac search

 

சென்னை எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டட வளாகத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கு நீர்வளத்துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு பாஸ்கர் என்பவர் உதவி செயற்பொறியாளராக செயல்பட்டு வருகிறார்.

 

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய பல மணி நேரம் சோதனை நடத்தினர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் உதவி செயற்பொறியாளர் பாஸ்கரை விசாரணைக்காக அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்