Skip to main content

பெண் தூய்மைப் பணியாளர் மீது மோதிவிட்டு தப்பிய இளைஞர்; வைரலாகும் சிசிடிவி காட்சி

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
The youth escaped after hitting the female sanitation worker; CCTV footage goes viral

வேலூரில் சாலையோரம் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு இளைஞர் ஒருவர் கண்டுகொள்ளாமலே தப்பித்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாநகர் சத்துவாச்சாரி மந்தைவெளி தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பகுதியில் பெண் தூய்மைப் பணியாளர் விஜயலட்சுமி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பெண்ணின் மீது பலமாகும் மோதினார். இதில் தூய்மைப் பணியாளர் விஜயலட்சுமிக்கு கால் முறிந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய அந்த இளைஞர் மோதியவுடன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெண் தூய்மைப் பணியாளர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு மனிதாபிமானமின்றி நிற்காமல் சென்ற அந்த இளைஞரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்