Published on 20/04/2022 | Edited on 20/04/2022
![Black flag for governor Case filled against 89 people](http://image.nakkheeran.in/cdn/farfuture/eRk6xs4l-W_ZXTfZC6s_oGUvCyoiJE13HAX59wq2-0o/1650423820/sites/default/files/inline-images/100_25.jpg)
தருமபுரம் ஆதீன குரு மகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு நேற்று வருகை தந்த தமிழக ஆளுநருக்கு விசிக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்டினர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பிற்காக வந்த வாகனங்களின் குறுக்கே கருப்புக்கொடியை எரிந்தும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 89 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், சேதம் ஏற்படுத்த முயற்சித்தல், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்கள் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.