Skip to main content

'இளைஞர்களுக்கு போராட்டம் தான் முழுநேர வேலை' - வழக்கறிஞர் ராஜு பேச்சு!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் உழவர் சந்தையில் குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக நடைபெற்ற அஞ்சாதே போராடு என்கிற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு பேசும்போது, "ஒவ்வொரு மாநிலத்துக்கேற்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  ஊருக்கும் ஜனநாயகம் மாறுகிறது. ஸ்டெர்லைட் எதிர்த்து உயிர் கொடுத்து போராடினார்கள். போராடியவர்களை தேசத்துரோகிகள் என்று குரல் கொடுக்கிறார்கள் பாஜகவும் இந்து முன்னணியும்.

 

Advocate Raju  about caa

 



சங்பரிவாரம் அகண்ட பாரதம் விரும்புகிறது. ஒற்றை வரி, ஒற்றை கலாச்சாரம், ஒரே நாடு ஆக்கிவிட விரும்புகிறது. அதை கொண்டு வர முடியாது. காரணம் கோமாதா Vs காளை அடக்குபவர்களுக்குமான போராட்டம் இங்கு நடக்கிறது. மக்கள் ஒன்றுபடுத்த தலைவனில்லை. கட்சியில்லை. 2020ல் காந்தி இருந்த போது ஏற்பட்ட நிலைமை இருக்காது. எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசலில் மக்களே போராடினார்கள். முறியடித்தனர். இந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு அமைப்புகள் துணை நின்றார்கள் நாமும் சேர்ந்து அவர்களுக்காக போராடினோம்.

வழக்கு சுமந்தோம், சிறை சென்றோம். எந்த தலைவர்கள் வந்தார்கள். பாஜக, அதிமுக வர வேண்டாம் என்பதானால் திமுக 39 எம்பி வெற்றி பெற்றனர். இதனால் திமுக முன்னெச்சரிக்கையாக 2 கோடி கையெழுத்து பெற்றது. சிஏஏ அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. இன்னும் ஒரு வருடத்தில் ஆட்சி முடிய போகிறது எடப்பாடி மக்கள் மத்தியில் வந்தே ஆக வேண்டும்.

மக்களை சந்திக்க வரும் அதிமுக அமைச்சர்களை கேள்வி கேளுங்கள். தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளது. பட்ஜெட்டில் பற்றாக்குறை பட்ஜெட் தான் உள்ளது. உற்பத்தி மந்த நிலை. வியாபாரம் இல்லை. 5 மில்லியன் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. பொதுதுத்துறை தனியார் மயமாகும். இப்படி இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

 



நேருக்கு நேராக போராடி  மோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ் கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டாமல் வேறு வழிஇல்லை. இனி இளைஞர்களுக்கு போராட்டம் தான் முழுநேர வேலை, பெண்கள், உழைக்கும் மக்கள் போராட வாருங்கள். எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வாருங்கள். வண்ணாரப் பேட்டையில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடக்கிறது.

கோலம் போட்டவர்களை கைது செய்கிறார்கள். காவல் துறை தடை, நீதிமன்ற தடைக்கு பிறகு தான் போராட்டம் தொடர்கிறது. காஷ்மீரில்  மக்களை சிறை வைத்தனர். அப்போதும் எழுச்சி ஏற்படவில்லை,  பாபர் மசூதி தீர்ப்பின் போது எழுச்சி வர வில்லை. புதிய கல்வி கொள்கை, உபா சட்டத் திருத்தம் என எப்போதும் எழுச்சி வரவில்லை. தற்போது இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து தலித், ஆதிவாசி, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என மொத்த மக்களையும் ஒழிப்பதே இவர்களின் நோக்கம். மக்களை அச்சுறுத்தி பதட்டத்தில் வைத்திருப்பதே பாசிசம். அதை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் செய்யும்.

போராட்டமே இதற்கு தீர்வு. உச்ச நீதிமன்ற நீதிபதியே இங்கு வந்து ஜநாயகத்தை காப்பாற்றும் போராட அழைப்பு விடுத்து பேசி இருக்கிறார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சென்னையில் அரசியல் சட்டத்தை காப்பாற்ற மனித சங்கிலியாக கைகோர்த்து நிற்கிறார்கள். ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு. சிஏஏவை வைத்து மக்களை பிரித்து பாசிசத்தை செயல்படுத்தலாம் என ஆயுதத்தை ஏவியிருக்கிறார்கள். அதே ஆயுதத்தை வைத்து ஆர்எஸ்எஸ் , பாஜக கும்பலை ஆட்சியிலிருந்து மட்டுமல்லாமல் சமூகத்திலிருந்து துடைத்து எறிவது தான் இந்த மாநாட்டின் நோக்கம்" எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிவில் மக்கள் பாடகர் கோவன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழகம் சிறப்பான பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.