Skip to main content

அதிமுக உட்கட்சி விவகாரம்; தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Published on 07/02/2025 | Edited on 07/02/2025
ADMK internal party issue Judgment date announcement

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுத் தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை இன்று (07.02.2025) மீண்டும் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கல்யாணசுந்தரம், “உட்கட்சி விதிகளில் திருத்தம் செய்தது. புதிய சட்டத் திட்டங்களை கொண்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை.  கட்சியில் எந்த பிளவும் இல்லை.

எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு நீடிக்கிறது.  தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்” என வாதிட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்