Skip to main content

டிராக்டர் மீது கார் மோதி விபத்து; 4 பேர் உயிரிழப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Accident involving a car hitting a tractor; 4 people lost their lives

திருவண்ணாமலை அருகே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த கார் டிராக்டர் மீது மோதியதில் காரில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் சின்னகாங்கேயனூர் பகுதியில் ஆந்திர பதிவு எண் கொண்ட ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரின் ஓட்டுநர் கண் அயர்ந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்ற நிலையில் இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

இதில் காரில் பயணித்த அழகன், பாண்டியன், பிரகாஷ், சிரஞ்சீவி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் வந்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றிக்காக வந்திருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்